;
Athirady Tamil News

ஜெயிலில் உயிருக்கு ஆபத்து: சந்திரபாபு நாயுடுவை வீட்டுக்காவலில் வைக்க கோரி கோர்ட்டில் மனு!!

0

ஆந்திர முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயிலில் அவரது உயிருக்கு மாவோயிஸ்டுகளால் ஆபத்து ஏற்படும் என தெரிவித்துள்ளனர். இதனால் சந்திரபாபு நாயுடுவை ஜெயிலுக்கு பதிலாக வீட்டு காவலில் வைக்க அனுமதிக்க வேண்டுமென சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சிறப்பு கோட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டவுடன் அவரது கட்சி நிர்வாகிகள் முக்கிய நிர்வாகிகள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். தெலுங்கு தேசம் கட்சியை சார்பில் நேற்று பந்த் நடந்தது. இதனையடுத்து எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் தொடர்ந்து 72 மணி நேரத்திற்கு மேலாக வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். அவர்களை உறவினர்கள் குடும்பத்தினர் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.