;
Athirady Tamil News

நான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன்: ஒளிவு மறைவு இல்லாமல் பேசிய ரிஷி சுனக் !!

0

நான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன், என் மனைவியும் அவரது குடும்பத்தினரும் இந்தியக் குடிமக்கள், அவர்களுக்கு இந்தியாவில் சொத்து உள்ளது என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

அவரின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்கள் குறித்து பிரித்தானிய ஊடகங்களின் பேச்சுக்கு பதிலளிக்கும் முகமாகவே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பிரதமர் ஒளிவு மறைவு இல்லாமல் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறோம் என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறிக்கொண்டிருக்கின்ற நிலையில் இதுதான் உண்மை என்பது போல பதிலளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சர்சைகள் குறித்து அவர் கூறியதாவது, நான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன், என் மனைவியும் அவரது குடும்பத்தினரும் இந்தியக் குடிமக்கள். அவர்களுக்கு இந்தியாவில் சொத்து உள்ளது என்றார்.

அதேவேளை, நான் இந்தியாவுக்குச் சென்றதற்கு மூன்று நோக்கங்களுக்காக, அவை ரஷ்ய அதிபர் புடினுக்கு தூதரக மட்டத்தில் அழுத்தத்தை அதிகரிப்பது, பருவநிலை தொடர்பிலான நடவடிக்கை மற்றும் இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துதல் எனவும் ரிஷி சுனக் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.