;
Athirady Tamil News

திருடிய டிராக்டர் சக்கரத்தில் சிக்கிய திருடன்!!

0

திருடர்கள் திருட சென்ற இடத்தில் சமைத்து சாப்பிட்டது, தூங்கியதால் சிக்கியது போன்ற சம்பவங்களை கேள்விபட்டிருக்கிறோம். அந்த வகையில் குஜராத்தில் நடைபெற்ற ஒரு திருட்டு சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அங்குள்ள மொடோசா பகுதியில் டிராக்டர் ஷோரூம் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு விற்பனைக்காக நிறுத்தப்பட்டுள்ள டிராக்டர்களை கண்காணிப்பதற்காக சி.சி.டி.வி. கேமிராவும் பொருத்தப்பட்டிருந்தது. சம்பவத்தன்று இந்த ஷோரூமுக்குள் நுழைந்த திருடன் ஒருவன் ஒரு டிராக்டரை திருட திட்டமிட்டுள்ளார். ஆட்கள் யாரும் இல்லாததை உறுதி செய்த அந்த திருடன், டிராக்டரின் பின் சக்கரத்தின் அருகில் நின்று கொண்டு டிராக்டரை ஆன் செய்துள்ளான்.

ஆனால் எதிர்பாராதவிதமாக டிராக்டர் முன்னோக்கி சென்றதால் திருடனின் கால் மீது அதன் சக்கரம் ஏறியது. இதனால் சக்கரத்தில் சிக்கிய திருடன் கீழே விழவே அவன் மீது டிராக்டர் ஏறியது. ஆனாலும் அதிர்ஷ்டவசமாக திருடனுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. இடுப்பை மட்டும் தேய்த்து கொண்டு, ஓடி சென்று டிராக்டர் மீது தாவி அமர்ந்து அதனை திருடி சென்றுவிட்டான். மறுநாள் டிராக்டர் நிறுவன ஊழியர்கள் அங்கு வந்த போது தான் திருட்டு நடைபெற்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை போலீசாரிடம் கொடுத்து புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.