;
Athirady Tamil News

கடும் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: இறந்த சிறுமியின் உடலை 3 நாட்களாக அடக்கம் செய்ய முடியாமல் தவிப்பு!!

0

ஆந்திரா மாநிலம் மீஞ்சி புட் மண்டலம், தும்மிடி புட் மலை கிராமத்தில் 550 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சாலை வசதி இல்லை. இந்த கிராமத்தை சேர்ந்த சிறுமி பானு (வயது 10). இவர் கடந்த 11-ந் தேதி உடல்நல குறைவால் இறந்தார். மலை கிராமத்தின் குறுக்கே செல்லும் ஆற்றைக் கடந்து சிறுமியின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வேண்டும். ஆனால் கடந்த 4 நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சிறுமியின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் கிராம மக்கள் அவதி அடைந்தனர். 3 நாட்களாக வீட்டிலேயே உடலை வைத்திருந்தனர்.

நேற்று ஓரளவு ஆற்றில் வெள்ளம் குறைந்தது. சிறுமின் உடலை சுமந்து சென்று ஆற்று வெள்ளத்தை கடந்தனர். 3 நாட்களுக்கு பிறகு சிறுமி உடலை அடக்கம் செய்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில் :- தும்முடி புட்-லட்சுமிபுரம் இடையே செல்லும் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டித்தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம். கடந்த தேர்தலின்போது தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளவர் ஆட்சிக்கு வந்தவுடன் மேம்பாலம் கட்டி தருவதாக உறுதி அளித்தார் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேம்பாலம் கட்ட ஒரு கோடி ஒதுக்கீடு செய்தும் பாலம் கட்டும் பணி கிடப்பில் போட்டுள்ளனர். முறையான சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் நோயாளிகள், கர்ப்பிணி பெண்களை குறித்த நேரத்திற்கு மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல முடியாததால் உயிர் இழப்புக்கள் ஏற்படுகிறது என்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.