;
Athirady Tamil News

யாழில் பாடசாலையில் பிள்ளையை ஏற்ற சென்ற சமயத்தை பயன்படுத்தி வீட்டினுள் களவு!!

0

பாடசாலையில் பிள்ளையை ஏற்ற சென்ற சமயத்தை பயன்படுத்தி வீட்டினுள் நுழைந்த திருடர்கள் 13 பவுண் நகை மற்றும் ஒரு தொகை வெளிநாட்டு நாணயங்கள் என்பவற்றை திருடி சென்றுள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர் , நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ,மதியம் பாடசாலையில் இருந்து பிள்ளைகளை அழைத்து வர சென்ற சமயம் , வீட்டினுள் நுழைந்த திருடர்கள் வீட்டில் இருந்த 13 பவுண் தங்க நகைகளையும் , ஒரு தொகை வெளிநாட்டு காசுகளையும் திருடி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.