;
Athirady Tamil News

ஈழத்தமிழர்களை ஏமாற்றிப் பிழைக்கும் சீமான்! பரபரப்பைக் கிளப்பிய குரல்பதிவு

0

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈழத்தமிழர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார் என தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதற்கான சான்று இதோ என ஈழத் தமிழர் ஒருவர் பேசியதாக குரல் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்த விவகாரத்தில், தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி குரல் கொடுத்தார்.

சீமானுக்கு எதிரான குரல்பதிவு
அத்துடன் சீமானுக்கு எதிராக மோதல் போக்கை அவர் கடைபிடித்து வருகிறார். இந்த நிலையில் சீமானுக்கு எதிராக குரல்பதிவு ஒன்றை வெளியிட்டு வீரலட்சுமி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில், ‘ஈழத் தமிழர்களின் துயரங்களை துடைக்க தன்னுடைய சொந்தப் பணத்தில் செலவு செய்து, போராட்டம் செய்து, சிறைக்குச் சென்று, தியாக உணர்வோடு பல லட்சம் இளைஞர்களும், இளம் பெண்களும் தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆனால், சீமானோ, ஈழத்தமிழர்களின் துயரங்களையும், வேதனைகளையும், இலட்சியங்களையும் வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார். ஈழத்தமிழர்களை வைத்து பணம் சம்பாதிக்கிறார்’ என குற்றம்சாட்டியுள்ளார்.

வீரலட்சுமி வெளியிட்ட குரல் பதிவில் பேசும் நபர், “நான் இலங்கைத் தமிழன். இலங்கையில் இருந்து தற்போது சவுதியில் உள்ளேன்.

நான் முன்னே சீமானுக்கு காசு போட்ட ஆவணஙங்கள் அவ்வளவும் என்கிட்ட இருக்கிறது. எனக்கு தமிழ்நாட்டுல குடியுரிமை வாங்கி தாரேன் என்று சொன்னார்.

எங்க குடும்பத்துல 8 பேர் இருக்கோம். போராட்டத்தில் 2 அண்ணா இறந்து போய்ட்டாங்க.

நான் மட்டும் தான் இங்கே இருக்கிறேன், ரெண்டு தங்கையும் இருக்காங்க நாட்டுல. எல்லாருக்கும் தமிழ்நாட்டுல குடியுரிமை வாங்கி தாரேன் வாங்க என்று சொல்லி நிறைய காசு வங்கியிருக்கிறாங்க.

ஒரு ரெஸ்பான்ஸும் இல்ல. ஒரு 12 வருஷமாச்சு. ஆர்.கே.நகர் தேர்தலில் எவ்வளவோ காசு செலவழிச்சிருக்கேன்’ என பேசியுள்ளார்.

வீரலட்சுமி ஆதாரம் என்று வெளியிட்டுள்ள இந்த குரல்பதிவு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.