;
Athirady Tamil News

அரச வங்கியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: பெருந்தொகை தங்கம் மாயம்

0

வென்னப்புவ, வைக்கல அங்கம்பிட்டியவில் உள்ள அரச வங்கி ஒன்றில் தங்கப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அங்கு சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான தங்கம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கம்
கடந்த 28ஆம் திகதி வங்கியின் கையிருப்பில் இருந்து தங்கம் திருடப்பட்டது.

இரவு வேளையில் வங்கிக்குள் பிரவேசித்த சிலர் அங்கிருந்த பெட்டகத்தை உடைத்து தங்கத்தை எடுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.