;
Athirady Tamil News

கூட்டணியில் விலகியதற்கு EPS தண்டனை அனுபவிப்பார், சின்னம் முடங்க வாய்ப்பு இருக்கு – டிடிவி தினகரன்!

0

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது குறித்து டிடிவி தினகரன் பேசியுள்ளார்.

டிடிவி தினகரன்
மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில், “பாஜக கூட்டணியில் இருந்து விலகியதற்கான தண்டனையை எடப்பாடி பழனிசாமி அனுபவிப்பார்.

பாஜக உதவியால்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தினார். பாஜகவை விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி யாரோடு மெகா கூட்டணி அமைக்கப் போகிறார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பேட்டி
இதனை தொடர்ந்து, அவர் பேசுகையில், “பாஜகவை கைவிட்டால் அதிமுக வசம் உள்ள இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்பு உள்ளது. சின்னம் போனால் அதிமுக வருங்காலத்தில் நெல்லிக்காய் மூட்டை போல சிதறும்.

கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைவர்கள் என்னிடம் பேசி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியுடன், ஓ.பன்னீர்செல்வம் இணைந்துவிட்டாலும் அமமுக தனித்து இயங்கும்” என்று கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.