;
Athirady Tamil News

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்து குறித்து சுகாதார பிரிவு எச்சரிக்கை..!

0

தற்போது நிலவும் காலநிலை காரணமாக பல நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைரஸ் காய்ச்சலின் அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதுள்ள நிலைமைகளின் கீழ் வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் போன்ற நிலைமைகள் ஏற்படக்கூடும் என குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

வயிற்றுப்போக்கு மற்றும் இரைப்பை குடல் நோய்கள் குறித்து கவனமாக இருக்குமாறு மருத்துவர் மேலும் குறிப்பிடுகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.