;
Athirady Tamil News

ஹார்முஸ் நீரிணை முடக்கம்… பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்து அதிகரிப்பு

0

மத்திய கிழக்கில் நடக்கும் அமெரிக்க-ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக, பனாமா கால்வாய் வழியாக கப்பல் போக்குவரத்து அதிகரித்துள்ளது.

300 கப்பல்கள்
மத்திய அமெரிக்கா வழியாகச் செல்லும் முக்கிய சரக்குக் கால்வாயை இயக்கும் தன்னாட்சி அமைப்பான பனாமா கால்வாய் ஆணையம், செவ்வாயன்று இதைத் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலைமை சீராகும் வரை இந்த நிலைத் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் முகமையின் நிதித் தலைவர் விக்டர் வயல் கூறியுள்ளார்.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், அக்டோபர் மாதம் முதல் கால்வாயில் சுமார் 300 கப்பல்கள் கடந்து சென்றுள்ளன என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், கடந்த 24 மணி நேரத்தில், முக்கியமாக காலியான சரக்குக் கப்பல்கள் ஏழு ஹார்முஸ் நீரிணையைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர்நிறுத்தக் காலத்தில்
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் பதற்றமான போர்நிறுத்தக் காலத்தில், வளைகுடாவின் நுழைவாயிலில் அமைந்துள்ள அந்த முக்கிய நீர்வழித்தடம் வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து,

பிப்ரவரி 28 அன்று ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு நாளொன்றுக்கு சராசரியாக நிகழ்ந்த 140 பயணங்களில் ஒரு சிறு பகுதியையே குறிக்கிறது.

ஏப்ரல் 13-ஆம் திகதி ஈரான் மீது முற்றுகை விதிக்கப்பட்டதிலிருந்து, அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் 37 கப்பல்களைத் திசைதிருப்பியுள்ளதாக இராணுவம் ஏப்ரல் 25-ஆம் திகதி தெரிவித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.