;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் 200 ஆண்டுகள் பழைமையான மரம் சாய்ந்தது

0

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகரிலிருந்த 200 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

குறித்த வேப்பம்பரமானது A-9 வீதிக்கு குறுக்காக மின்சாரக் கம்பங்கள் மீது வீழ்ந்துள்ளது. அதனால் சாவகச்சேரி நகருக்கான மின்சாரம் தடப்பட்டுள்ளது.

அத்துடன் இதன் காரணமாக , ஏ-9 வீதிப் போக்குவரத்து 30 நிமிடங்கள் தடைப்பட்டிருந்தன.

மரம் முறிந்து வீழ்ந்ததில் பெட்டிக்கடையும், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.