;
Athirady Tamil News

வீதியை விட்டு விலகி 150 அடி உயரமான குன்றின் மீது விழுந்த கார்

0

பதுளையில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி பதுலு ஓயாவில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை, பண்டாரவளை பிரதான வீதியில் உடுவர நீலபோவில பிரதேசத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லயிலிருந்து பசறை நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி உயரமான குன்றின் மீது விழுந்து பதுலு ஓயாவில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெற்ற விபத்து
ஞாயிற்றுக்கிழமை (8) அதிகாலை 1.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனம் நீரில் மிதந்து கொண்டிருந்த போது உரிமையாளர் காரில் இருந்து இறங்கி பதுலு ஓயா வெள்ளத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் கடும் மழையினால் பதுலு ஓயாவின் நீர் மட்டம் இந்த நாட்களில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.