;
Athirady Tamil News

வவுனியாவில் பாரிய விபத்து: இருவர் உயிரிழப்பு- 6 பேர் படுகாயம்!

0

வவுனியா வெளிக்குளம் பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழந்ததுடன் 6பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தானது நேற்று (9) இரவு 9.30 மணியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

மடுகந்தை பகுதியில் உள்ள காவல்துறை விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த அதிரடிப்படைக்கு சொந்தமான ஜீப் ரக வண்டி ஒன்று வெளிக்குளம் பகுதியில் வீதியின் குறுக்கே சென்ற மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இருவர் அவசர சிகிச்சை பிரிவில்
ஜீப் வண்டியில் பயணித்த காவல்துறை விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இருவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.