;
Athirady Tamil News

யாழில் பொலிஸ் அதிகாரிமீது பாய்ந்த விசாரணை!

0

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி தொடர்பிலான விசாரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாக யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் மஞ்சுள செனரத்தெரிவித்தார்.

அண்மையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பிலான கூட்டம் கடற்தொழில் அமைச்சர் தலைமையில் இடம் பெற்றது.

ஒத்துழைக்காவிட்டால் கஞ்சா வழக்கு
கூட்டத்தின்போது பருத்தித்துறையில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் வடமராட்சி கிழக்கில் களவாக மணல் ஏற்றுபவர்களுக்கு ஒத்துழைக்காவிட்டால் கஞ்சா வழக்கு போடுவேன் என அச்சுறுத்தல் விடுகின்றார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அது தொடர்பில் உரிய விசாரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாகவும் விசாரணைகள் முடிவுற்றதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.