;
Athirady Tamil News

உலக முடிவுக்கு செல்லும் பாதை மறு அறிவித்தல் வரை பூட்டு

0

வெலிமடையில் உள்ள அம்பேவெல – ரெய்ந்தபொல வீதியில் ஏற்பட்ட மண்சரிவில் காரணமாக உலக முடிவுக்கு செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (11) குறித்த பாதையில் 3 கிலோமீற்றர் அளவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டது.

மண் சரிவு அபாயம்

நிலச்சரிவினால் வீதி பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும், போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் மண் சரிவு ஏற்படக்கூடிய அபாயத்தை கருத்தில் கொண்டு இந்த வீதி மூடப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.