;
Athirady Tamil News

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மாணவர்களுக்கான அறிவிப்பு!

0

எதிர்வரும் 15 ஆம் திகதி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.

இந் நிலையில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தங்களுக்கான பரீட்சை நிலையத்துக்கு செல்வதில் அசௌகரியம் காணப்படுமாயின் அருகில் உள்ள வேறு பரீட்சை நிலையத்துக்கு சென்று பரீட்சைக்கு தோற்ற முடியும் என அறிவிக்கபப்ட்டுள்ளது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.