;
Athirady Tamil News

புதிய வரிகள் தொடர்பில் ரணில் எடுத்த முடிவு

0

இலங்கை மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது என அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறினார் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் வருமானம் ஈட்டும் திணைக்களங்களின் தலைவர்களுடன் நிதியமைச்சில் இன்று(13) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, வருமானம் ஈட்டும் திணைக்களங்களின் வருமான இலக்குகளை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதுடன், அங்கு நிறுவனங்கள் யோசனைகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வருமான வரி
அரசாங்கம் வருவாயை அதிகரித்து விரைவாக வருமான இலக்குகளை நோக்கி நகர வேண்டும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, இந்நாட்டு மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது எனவும், தற்போதுள்ள முறையில் வருமான வரி செலுத்தாதவர்களிடமே வருமான வரி அறவிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.