;
Athirady Tamil News

திருமணம் செய்ய மறுத்த 18 வயது அக்கா மகள் – விரக்தியில் 35 வயது தாய்மாமான் வெறிச்செயல்!

0

திருமணம் செய்துகொள்ள மறுத்த அக்கா மகளை சொந்த தாய்மாமானே படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருதலை காதல்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கே.பந்தாரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சரண்ராஜ் (35). இவர் தனது சகோதரியின் ஜீவிதா என்ற 18 வயது மகளை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

ஆனால் வீட்டில் பெண் கேட்டபோது வயதை காரணம் காட்டி சகோதரி திருமணம் செய்து கொடுக்க மறுத்துள்ளார். இதனால் சரண்ராஜ் அடிக்கடி சகோதரி வீட்டிற்கு சென்று தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், கடந்த ஒரு வாரமாக ஜீவிதாவை பின் தொடர்ந்துள்ளார்.

ஆனால் ஜீவிதா அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால் வீட்டில் தனியாக இருந்துள்ளார் ஜீவிதா. அப்போது வீட்டிற்கு சென்ற சரண்ராஜ் அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

பெண் படுகொலை
ஆனால் அந்த பெண் மறுத்ததால், வாயில் துணியை வைத்து அடைத்து கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார் சரண்ராஜ். இதுகுறித்து அறிந்து அங்கு வந்த நாட்டறம்பள்ளி போலீசார் ஜீவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்த கொலை வழக்கில் சரண்ராஜை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். ஆனால் கொலை செய்த எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சரண்ராஜ் டீக்கடை ஒன்றில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்துள்ளார்.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்ததை சரண்ராஜ் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.