;
Athirady Tamil News

இறந்து கரையொதுங்கிய கடலாமைகள்; காரணம் என்ன?

0

மன்னார் தென்கடல் பகுதியில் கடல் ஆமைகள் இறந்து கரையொதுங்கி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த இடத்துக்கு சென்று உயிரிழந்த ஆமைகளை பார்வையிட்டுள்ளனர்.

கடந்த மூன்று தினங்களாக மன்னார் தென்கடல் பிராந்தியத்தில் அதிகமான கடல் ஆமைகள் இறந்து கடலில் மிதந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகமான ஆமைகள் இறந்த நிலையில் மன்னார், சிலாவத்துறை கடற்கரைப் பகுதிகளில் கரையொதுங்கி வருவதாகவும் அப்பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , அதிகாரிகள் இன்று (16) அப்பகுதிக்கு சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.