;
Athirady Tamil News

இலங்கை – இந்திய கப்பலில் தங்கம் கடத்தல்….!காங்கேசன்துறையில் இரண்டு மணிநேர சோதனை

0

இலங்கை – இந்திய கப்பல் சேவையில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கமைவாக காங்கேசன்துறையில் இரண்டு மணிநேர சோதனை மேற்கோள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கப்பல் சேவையானது கடந்த 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றையதினம் (18.10.2023) இலங்கையில் இருந்து முற்பகல் 11 மணியளவில் இலங்கை – காங்கேசன்துறையில் இருந்து இந்தியா – நாகபட்டினம் நோக்கி கப்பலானது பயணிக்க இருந்தது.

பயணிகள் அசௌகரியம்
இந்தியா செல்லவுள்ள பயணிகளும் பயணத்தை ஆரம்பிக்க இருந்த நிலையில், குறித்த கப்பலில் தங்கம் இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில் திடீரென அனைத்து பயணிகளும் இறக்கப்பட்டு சோதனை இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இருப்பினும் தங்கம் மீட்கப்படவில்லை. இந்நிலையில் இரண்டு மணி நேரத்துக்கு பின்னர் கப்பலானது பயணத்தை ஆரம்பித்தது.

இந்நிலையில் பயணிகள் மிகவும் அசௌகரியத்திற்கு உள்ளாகினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.