;
Athirady Tamil News

பாடசாலை ஒன்றில் 18 இலட்சம் பெறுமதியான பொருட்கள் திருட்டு

0

தம்புள்ளை பாடசாலை ஒன்றில் சோலார் பேனல்களுக்காக பொருத்தப்பட்டிருந்த சில பொருட்கள் திருடப்படடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 மின்கலங்கள் தம்புள்ளை மற்றும் சீகிரியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சில குழுக்களால் திருடப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட 12 மின்கலங்களின் பெறுமதி சுமார் 18 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வழங்கப்பட்ட நன்கொடை
பாடசாலைக்கு சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் கிடைக்கிறது என்பதோடு சோலார் பேனல்கள் சீனா மற்றும் கல்வி அமைச்சால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பாடசாலையின் பிரதான நுழைவாயிலை உடைத்துள்ள திருடர்கள் அலுவலகத்தின் பின்பக்க கதவை திறந்து உள்ளே புகுந்து 12 மின்கலங்களை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் அதிபர் நேற்று (18) காலை தம்புள்ளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்படி சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.