;
Athirady Tamil News

இலங்கை தாதாவுக்கு இன்டர்போல் பிடியாணை!

0

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரரும் கொலைகள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மன்னா ரமேஷை கைது செய்ய சர்வதேச பொலிஸ் மூலம் சிவப்பு பிடியாணையைப் பெற பொலிஸார் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

அதன்படி, மன்னா ரமேஷை கைது செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே செயற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

துபாயில் தலைமறைவு
மன்னா ரமேஷ் என்ற பாதாள உலக தலைவன், அவிசாவளை பிரதேசத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகளை அச்சுறுத்தியமை கொலை, கப்பம், போதைப்பொருள் கடத்தல் போன்ற பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அதோடு மன்னா ரமேஷ் தற்போது துபாயில் தலைமறைவாகி இவ்வாறான குற்றச் செயல்களை வழிநடத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மன்னா ரமேஷின் கொலை, கப்பம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல குற்றச்செயல்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் ஆதாரங்களையும் பெற்று, குற்றப் புலனாய்வுத் துறை மூலம் சர்வதேச பொலிஸாருக்கு அனுப்பும் பணியில் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.