;
Athirady Tamil News

மின்கட்டண அதிகரிப்பு : சஜித் கண்டனம்

0

மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் விசனம் தெரிவித்துள்ளார்.

அவ்வகையில், வரி செலுத்த வேண்டிய மக்களிடம் உரிய முறையில் வரி அறவிடாமல் மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய மதுபான அனுமதிப்பத்திரம்
பொரளை இளைஞர் பௌத்த சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்ற 111வது இலங்கை மயான பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர், போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனையை பிரபலப்படுத்தும் நோக்கில் அந்த நிறுவனங்களிடம் வரி அறவிடாமல் அரசாங்க அமைச்சர்கள் ஊடாக புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள சில அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.