;
Athirady Tamil News

வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த சோகம்

0

மாத்தறை – கொலொன்ன தடயம் கந்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்தில் உயர்தர மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மண் மேடு சரிவு
மண் மேடு சரிந்துள்ளமையால் அப்பகுதிக்கு தற்போது செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் மீது நேற்று (22) இரவு மண்மேடு சரிந்து விழுந்ததில் தொரபனே பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயது மாணவரே உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.

மேலும் சடலம் தற்போது ஓமல்பே வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.