;
Athirady Tamil News

கொழும்பில் நடைபெறவுள்ள இலங்கையின் இரண்டாவது பொருளாதார உச்சி மாநாடு

0

இலங்கையின் இரண்டாவது பொருளாதார உச்சி மாநாடு அடுத்த மாதம் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது.

குறித்த மாநாட்டின் போது பொருளாதார சீர்திருத்தங்களுக்கான அவசியம் மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள சாத்தியமான தாக்கம் பற்றியும் கவனம் செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார முன்னேற்றம்
இது தவிர, மறுசீரமைப்பு மூலம் ஏற்படும் மாற்றம், மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அபிவிருத்தி செய்வதில் தொழிலாளர்களின் பங்கு என்பன அமர்வின் மையமாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமர்வில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் உட்பட தொழில் அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு போன்றவற்றின் நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.