;
Athirady Tamil News

போதையில் பயணிகள் பேருந்தை செலுத்திய இ.போ.ச சாரதியின் , சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து

0

போதையில் பயணிகளுடன் வாகனத்தை செலுத்திய இலங்கை போக்குவரத்து சபையின் சாரதியின் சாரதி அனுமதி பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறையில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை ஊர்காவற்துறை பொலிஸார் மறித்து சோதனையிட்ட போது , சாரதி போதையில் இருந்ததை கண்டறிந்தனர்.

அதனை அடுத்து சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சாரதியை பொலிஸார் முற்படுத்திய போது , சாரதி தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார்.

அதனை அடுத்து , அவரது சாரதி அனுமதி பத்திரத்தை ஒருவருட காலத்திற்கு மன்று இரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன் 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.