;
Athirady Tamil News

யாழில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டியை மோதிய லொறி

0

யாழில் ஆலயம் ஒன்றில் பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டி, ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ்ப்பாணம் – நீர்வேலி மேற்கைச் சேர்ந்த 72 வயதுடைய தனபாலசிங்கம் மகேஸ்வரி என்பவரே உயிரிழந்துள்ளார்.

நீர்வேலி இராசவீதி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில், பொங்கல் நிகழ்வில் மூதாட்டி ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை, வீதியில் வேகமாக வந்த லொறி , வேக கட்டுப்பாட்டை இழந்து ஆலயத்திற்கு அருகில் நின்ற வாகனத்தில் மோதியதால் , குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில், 30 வயதான லொறியின் சாரதி கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.