;
Athirady Tamil News

மணல் கடத்தலை மாத்திரம் கண்காணிக்க முடியாது: சிறீதரனுக்கு பதிலளித்த யாழ் காவல்துறை அத்தியட்சகர்

0

காவல்துறை வேலை என்பது சில்லறை கடை போன்றது நிறைய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் ஆகவே மணல் கடத்தல் விடயத்தினை மாத்திரம் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது என யாழ்ப்பாண பிரிவு உதவி காவல்துறை அத்தியட்சகர் யரூல் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இன்று(26) சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் போது யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களினால் இராணுவத்தை யாழில் நிலைநாட்டுவதற்காகவே காவல்துறையினர் இவ்வாறு மந்தகதியில் செயல்படுகிறார்கள் என தெரிவித்ததையடுத்து அதற்கு பதிலளித்த உதவி காவல்துறை அத்தியட்சகர் யரூல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்தோடு, காவல்துறையினர் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் உயிரை உச்சம் என மதித்து தான் இந்த கடமையை செய்ற்படுத்துகிறோம் எனவும் கூறியுள்ளார்.

அறிக்கை
அவர் மேலும் கூறுகையில், “சாதாரண மக்கள் என்ன பிரச்சினை என்றாலும் முதல் முதலாக நாடுவது காவல்நிலையத்தினைத்தான் மக்களுக்கு நிறைய பிரச்சினை உள்ளது நாங்கள் உயிரை பணயம் வைத்து தான் காவல்துறை கடமையினை செய்கின்றோம்.

நடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்த கருத்து ஏற்கக்கூடிய கருத்து அல்ல ஆளணி பற்றாக்குறை போன்ற பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றோம் எனினும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பெருமளவு குற்றங்களை கட்டுப்படுத்தக்கூடியதாக உள்ளது நீங்கள் வேண்டுமென்றால் அறிக்கைகளை எடுத்துப் பாருங்கள் 75 வீதமான குற்றங்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றோம் ஆகவே காவல்துறையினரால் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகளை சுதேசி வெட்டுவதை நீங்கள் நிறுத்த வேண்டும் ” என கோரியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.