;
Athirady Tamil News

கைது செய்யப்பட்ட டனிஸ் அலி வைத்தியசாலையில் அனுமதி

0

காலி முகத்திடல் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான டனிஸ் அலி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடல் (அரகலய) மக்கள் போராட்டத்தின் செயற்பாட்டாளர் டனிஸ் அலி நேற்று (27.10.2023) கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரால் கைது
கொழும்பு கோட்டை பேருந்து நிலையத்தின் பயணச்சீட்டு கவுன்டருக்கு அருகில் கலவரத்தில் ஈடுபட்டமைக்காக அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தின் போது டனிஸ் அலி மீது சிலர் தாக்குதல் நடத்தியதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட போராட்ட செயற்பாட்டாளர் டனிஸ் அலி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.