;
Athirady Tamil News

இலங்கையை அதிர வைத்த படுகொலைகள் : சந்தேக நபர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0

இலங்கையில் தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரியான தங்கல்லே சுதா என அழைக்கப்படும் நிலந்த குமார கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கல்லே சுதா உனவட்டுன பிரதேசத்தில் மறைத்து வைத்திருந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அவரை கைது செய்தபோது, ​​அவரிடம் 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

அதிர்ச்சி வாக்குமூலம்
தங்கல்லே சுதாவை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்தியதில், துப்பாக்கிச் சூடு மற்றும் வெட்டி 19 பேரை படுகொலை செய்ததாக விசாரணை அதிகாரிகளிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார்.

பலமிக்க குற்றவாளிகளை வாடகை அடிப்படையில் கொலைக்காக ஈடுபடுத்தியதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சந்தேக நபரால் வெளிப்படுத்தப்பட்ட கொலைகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.