;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் பாரிய விபத்து! குழந்தை உட்பட நால்வர் படுகாயம்

0

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இன்று(29) இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று மதியம் ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்துள்ளது.

விசாரணை
இதனால், முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட ஐவர் பயணித்த நிலையில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

மூன்று பெண்களும் ஒரு குழந்தையும் இதனால் காயமடைந்துள்ளனர்.

விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.