;
Athirady Tamil News

பலாங்கொடை – கதிர்காமம் வீதியின் போக்குவரத்து முற்றாக தடை

0

பலாங்கொடை – கதிர்காமம் பிரதான வீதியில் மண் மேடு சரிந்து பாறைகள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலாங்கொடை – கதிர்காமம் பிரதான வீதி கல்தொட்ட, நவனலிய பிரதேசத்தில் இன்று (31) அதிகாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து முற்றாக தடை
இதன் காரணமாக அவ் வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் பாறைகள், மேடுகள் சரிந்து வீதியில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அந்த வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கல்தொட்ட பொலிஸார் அறிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.