;
Athirady Tamil News

அரச நிறுவனமொன்றில் உடனடியாக நீக்கப்பட்ட ஊழியர்கள்: பிரதமர் அதிரடி

0

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில், பிரதமர் தினேஷ் குணவர்தன, தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தலைவர் உட்பட அனைத்து உறுப்பினர்களையும் நீக்கியுள்ளார்.

குறித்த நிறுவனத்திற்கு புதிய முகாமைத்துவ சபையொன்றை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதமர் விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.

இதன்படி, தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தலைவர் ஜயம்பதி பண்டார ஹெயின்கெந்த, அதன் ஏனைய உறுப்பினர்களான கலாநிதி டபிள்யூ. கே. கொழும்பகே, விதுர்சன் வின்சேந்திரராஜன், என். ஜி. எஸ். எச். எம். நௌஷாத் மற்றும் தினுக் ஹெட்டியாராச்சி ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தீர்மானம்
மேலும், அதன் உறுப்பினர்களாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அனுராதா விஜேகோன், கல்வி அமைச்சின் நிமாலி அனுஷா ஜயக்கொடி மற்றும் கே. டி. நான். எஸ். கே. சிறிவர்தனவும் அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

2007 ஆம் ஆண்டு 26 ஆம் இலக்க தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.