;
Athirady Tamil News

காப்பகத்திலிருந்து காணாமல் போயுள்ள சிறுவர்கள்; மீரிகம பிரதேசத்தில் பதற்றம்

0

கம்பஹா மாவட்டம் மீரிகம – அம்பன்வத்த பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் காப்பகத்தில் இருந்த இரண்டு சிறுவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறுவர் காப்பகத்தின் பொறுப்பதிகாரி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமலான சிறுவர்கள்
எவ்வித உத்தரவும் பெறாமால் 15 வயதுடைய இரு சிறுவர்கள் காப்பகத்தில் இருந்து பாடசாலை சீருடையில் வெளியேறியுள்ளதாக அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த இரண்டு சிறுவர்கள் குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக 071 859 1625 அல்லது 033 227 3222 என்ற இலக்கங்களுக்கு தெரிவிக்குமாறு மீரிகம தலைமையக பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.