;
Athirady Tamil News

படுக்கையறையில் மறைத்து வைக்கப்பட்ட போதைப் பொருள்

0

பதுளை – பல்லேகம கொட்டகொட பகுதியில் ஊள்ள வீடொன்றின் படுக்கை அறையின் மெத்தையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளுடன் 32 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து நேற்றைய தினம் (02.11.2023) சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருள்
இதன்போது படுக்கையறையில் மெத்தையின் மறைத்து வைக்கப்பட்டிருந்த கீழ் 6600 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார்த் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இன்றைய தினம் (03.11.2023) பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக பதுளைப் பொலிஸார்த் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.