;
Athirady Tamil News

கொழும்பில் பரிதாபமாக உயிரிழந்த 28 வயது இளைஞன்! வெளியான காரணம்

0

கொழும்பு – பாதுக்க பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 28 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் பாதுக்க துன்னான கூடலுவில பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான ஹொரணகே இஷார மதுஷங்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்து கொண்டு அப்பிரதேச ஆலயம் ஒன்றில் உதவியாளராக கடமையாற்றியவராவார்.

உள்ளூர் ஆலயத்தில் ஊர்வலம் வீட்டின் முன்புறம் செல்வதால், அதற்காக வீதி மின்விளக்கை பொருத்த சென்ற போதே அவர் இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.