;
Athirady Tamil News

கொழும்பில் முக்கிய வீதிக்கு பூட்டு! வெளியான காரணம்

0

கொழும்பு பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கரையோர வீதி மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்று(05) முதல் அந்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாற்று வீதி
பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பயணிகள் மேம்பாலத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த வீதி மூடப்பட்டுள்ளது.

எனவே அவ்வீதியினுாடாக பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.