;
Athirady Tamil News

நிகழ்நிலை சட்டமூல் தொடர்பில் உச்சநீதிமன்றம் விடுத்துள்ள தகவல்

0

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச இன்று (07.11.2023) நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றத் தீர்மானம்
எவ்வாறாயினும், சில சரத்துகள் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்மானத்தின் உத்தேச திருத்தங்களுக்கு உட்பட்டு, செயற் குழுவின் போது திருத்தப்பட்டால், இந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட விடயங்களுக்கு உட்பட்டு, சட்டமூலம் அல்லது அதன் விதிகள் எதுவும் அரசியலமைப்பிற்கு முரணாக இல்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.