;
Athirady Tamil News

யாழில் மோசமான செயலில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட மூவர் கைது

0

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில், இருவேறு வீடுகளை உடைத்து தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவரும், அதற்கு உடந்தையாக இருந்த பெண் உட்பட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஒரு தொகுதி நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மற்றொரு தொகுதி நகை மன்னார் மற்றும் திருகோணமலை பகுதிகளில் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் அவற்றை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

களவெடுத்த நகைகள் வங்கியில் அடகு
கடந்த மார்ச் மாதம் 05ஆம் திகதி கோப்பாய் பொலிஸ் பிரிவில் அதிகாலை வேளை ஆட்கள் இல்லாத நேரம் வீடு உடைத்து ஐந்தே கால் பவுண் நகைகளை களவெடுத்தனர்.

அதுமட்டுமல்லாது மற்றொரு வீட்டில் கடந்த ஏப்ரல் முதலாம் திகதி வீட்டில் ஆட்கள் அற்ற நிலையில் 13 பவுண் நகைகளை திருடியமை தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அவை தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன்படி முதன்மை சந்தேகநபரான திருநெல்வேலியைச் சேர்ந்த 22 வயதுடையவரையும் நகைகயை வாங்கி உருக்கிய ஒருவரையும் உடந்தையாக இருந்த பெண் என 3 பேரை கைது செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.