;
Athirady Tamil News

கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி : கற்பிட்டி கடற்பரப்பில் சிக்கிய இருவர்

0

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கற்பிட்டி கடற்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (09) மாலை கற்பிட்டி கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கடத்தல் பிடிபட்டுள்ளது.

பாரியளவிலான போதைப்பொருள்
570,000 பெறுமதியான போதைப் பொருள்களை ஏற்றிச் சென்ற டிங்கி படகுடன் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக
சந்தேகநபர்கள் 33 மற்றும் 39 வயதுடைய நுரைச்சோலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள். சந்தேகநபர்கள் இருவர் மற்றும் போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.