;
Athirady Tamil News

மொரவெவ பிரதேசத்தில் சற்றுமுன்னர் ஏற்பட்ட நில அதிர்வு!

0

திருகோணமலை மாவட்டத்தின் மொரவெவ பிரதேசத்தில் சற்று முன்னர் சிறிய நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

இன்றையதினம் (12-11-2023) மதியம் 1.15 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கம் 3.4 ரிக்டர் அளவுகோலில் உணரப்பட்டதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.