;
Athirady Tamil News

2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கிய அமைச்சரவை!

0

இலங்கையில் எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்றையதினம் (13-11-2023) காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையின் 78வது வரவு செலவுத் திட்ட உரையான 2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று நண்பகல் 12 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நிதி அமைச்சர் என்ற வகையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதன்பின், 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து நவம்பர் 14 முதல் 21 வரை ஏழு நாட்களுக்கு நடைபெறும்.

மேலும், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நவம்பர் 21ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.