;
Athirady Tamil News

கொழும்பு பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற பெரும் சோகம்! இரு மாணவிகள் மரணம்

0

வெல்லம்பிட்டிய – வெரகொட கனிஷ்ட பாடசாலையின் நீர் குழாய் பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் மற்றுமொரு மாணவி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து பிரதேசவாசிகளால் பாடசாலை அதிபர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான பாடசாலையின் அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த ஐந்து மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அதில் இன்னொரு மாணவி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் பாடசாலையில், மதில் விழுது மாணவி உயிரிழந்ததை அடுத்து படுகாயமடைந்த சிறுவர்கள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை என ஊடகவியளார்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.