;
Athirady Tamil News

தான் பயணித்த பேருந்தால் பலியான பெண்; வீதியை கடக்கையில் நேர்ந்த சோகம்

0

பெண் ஒருவர் பஸ்ஸில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்படும் போது அவர் பயணித்த பேருந்து மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .

இச் சம்பவம் இன்று புதன்கிழமை (15) பண்டாரவளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் மகுல் எல்ல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய பெண் ஆவார்.

வீதியை கடக்கையில் மோதிய பேருந்து
இவர் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பஸ்ஸில் பயணித்த நிலையில் பஸ்ஸில் இருந்து இறங்கி பஸ்ஸிற்கு முன்பாக வீதியை கடக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது அவர் பயணித்த பஸ்ஸினாலயே மோதப்பட்டு தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.