;
Athirady Tamil News

பாதசாரியை மோதி தலைக்கவசத்தினால் தாக்கிய பொலிஸ்!

0

நடந்து சென்ற பாதசாரியை பொலிஸ் மோட்டார் சைக்கிளால் மோதியதுடன், காயமடைந்த நபரை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைக்கவசத்தினால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பணி இடைநிறுத்தம்
சம்பவம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்ட குளியாபிட்டி பொலிஸ் அத்தியட்சகர் அருபொல உப பொலிஸ் பரிசோதகரை பணி இடைநிறுத்தம் செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த பாதசாரி குளியாபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.