;
Athirady Tamil News

புலம்பெயர் இலங்கையர்களுக்கு ரணில் விடுத்துள்ள கோரிக்கை!

0

தமிழ், சிங்கள புலம்பெயர் இலங்கையர்கள் இந்நாட்டு பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று(16) நடைபெற்ற ஆர்.ஐ.டி. அலஸின் 10ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அதிபர் ரணில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பில் மேலும் அவர் உரையாற்றுகையில்,

மொழி அறிவு
“ மொழி அறிவை சிங்களம், தமிழ் மொழிகளோடு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது.

2030ஆம் ஆண்டளவில் ‘அனைவருக்கும் ஆங்கிலம்’ என்ற திட்டம் அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் பல்கலைக்கழகங்களிலும் அறிமுகப்படுத்தப்படும்.” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.