;
Athirady Tamil News

அமெரிக்கவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை: அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

0

அமெரிக்காவில் மருத்துவத்தில் முனைவர் பட்டம் படித்துவந்த 26 வயது இந்திய மாணவர் காருக்குள் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட இந்தியாவைச் சேர்ந்த ஆதித்யா அட்லாகா என்ற மாணவர் சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் கடந்த 4 ஆண்டுகளாக மூலக்கூறு மற்றும் வளர்ச்சி உயிரியல் பிரிவில் முனைவர் பட்டம் படித்து வந்தார்.

நவம்பர் 9 ஆம் தேதி வெஸ்டர்ன் ஹில்ஸ் அருகே துப்பாக்கியில் சுடப்பட்ட நிலையில் காருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை போலீசார் மீட்டு மருத்துவமையில் சேர்த்த நிலையில் நவம்பர் 11ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆதித்யாவின் கொலை சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இது வரை யாரும் கைது செய்யப்பட வில்லை என கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.