;
Athirady Tamil News

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் போதை ஊசி; 19 வயது மாணவனுக்கு நேர்ந்த சோகம் – அதிர்ச்சி!

0

போதை பவுடரை ஊசி மூலமாக செலுத்திக்கொண்ட கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் மரணம்
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் ராகுல் (19). சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பிஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 25ம் தேதி நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்காக அண்ணா சாலையில் உள்ள விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளார்.

விழா முடிந்து காலையில் எழுந்த ராகுல் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை உடனடியாக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராகுல் உயிரிழந்துள்ளார்.

போதை ஊசி
இந்நிலையில் அவரின் உயிரிழப்பில் மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது போதைப்பொருள் பவுடரை ஊசி மூலமாக செலுத்திக் கொண்டது தெரியவந்தது.

மேலும், அதிகப்படியான போதை ஊசி போட்டுக் கொண்டதால் வலிப்பு ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து, போதைப்பொருள் பவுடர் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.