;
Athirady Tamil News

அமெரிக்காவில் இந்திய தூதரை முற்றுகையிட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள்: கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு

0

அமெரிக்காவில் இந்திய தூதர் தரண்ஜீத் சிங் சாந்துவை காலிஸ்தான் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹர்தீப் சிங் நிஜார் கொலை
கனடாவில் கடந்த ஜூன் மாதம் சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நேரடி குற்றச்சாட்டை முன்வைத்தது.

கனடாவின் நேரடி குற்றச்சாட்டை இந்தியா மறுத்ததுடன், இந்த பிரச்சனை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவில் பாதிப்பு ஏற்பட்டது.

இந்திய தூதரை முற்றுகையிட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள்
இந்நிலையில் சமீபத்தில் நியூயார்க் நகரம் குருத்வாராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜீத் சிங் சாந்துவை(taranjit-singh-sandhu) காலிஸ்தான் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு நிஜார் கொலை தொடர்பான பல கோஷங்களை எழுப்பினர்.

அதில் குறிப்பாக சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜாரை இந்தியா கொலை செய்துவிட்டதாக முழக்கங்களை எழுப்பினர். மேலும் சீக்கிய இளைஞர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதற்கும் இந்திய தூதரகம் தான் காரணம் என ஆத்திரத்துடன் முழக்கமிட்டனர்.

இந்த முற்றுகையில் இருந்து இந்திய தூதர் சாந்து விலகிச் சென்ற போது, எங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் செல்வது ஏன் என்ற கேள்வியையும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் முன்வைத்துள்ளனர்.

இதற்கிடையில் சமீபத்தில் அமெரிக்காவில் வைத்து மற்றொரு சீக்கிய பிரிவினைவாத தலைவர் குர்பத்வாண்ட் சிங்கை கொலை செய்ய இந்தியா திட்டமிட்டு வருவதாக தெரிவித்து அதற்கு அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.