;
Athirady Tamil News

யாழில் மிக மோசமாக பாதிப்படைந்துள்ள பிரதான வீதி! மக்கள் விசனம்

0

கொக்குவில் – வட்டுக்கோட்டை வீதியில் குளப்பிட்டி சந்தி மற்றும் ஆனைக்கோட்டை சந்தி இடையேயான வீதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறித்த வீதியில் இரு பக்கமும் காப்பெற் போடப்பட்டுள்ள நிலையில் இடை நடுவே உள்ள பகுதி வீதி மிக மோசமாக சேதமடைந்து குன்றும் குழியுமாக உள்ள நிலையில் மழை காலங்களில் வெள்ளம் தேங்கி வீதியால் பயணிக்கவே முடியாத நிலை காணப்படுகிறது.

மக்கள் விசனம்
பாடசாலை மாணவர்கள், பணிக்கு செல்வோர் பொதுப் போக்குவரத்து என நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் குறித்த வீதியின் குறிப்பிட்ட பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வீதியில் பயணிப்பவர்கள் நாளாந்தம் விபத்துக்களில் சிக்குகின்றனர்.

மிக மோசமாக வீதி பாதிக்கப்பட்ட நிலையில் குறித்த வீதிக்கு பொறுப்பான வீதி அபிவிருத்தி அதிகாரசபை என்ன செய்கிறது? தூங்குகிறதா? என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறைந்தபட்சம் தற்காலிகமாகவேனும் குறித்த வீதியை செப்பனிட்டு தர உரிய தரப்புக்கள் செயற்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.